google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: டார்லிங்-சினிமா விமர்சனம்

Sunday, January 18, 2015

டார்லிங்-சினிமா விமர்சனம்














சமீப காலங்களில் கோலிவுட் தமிழ்படங்களுக்கு பெருமை சேர்ப்பது திகில் நிறைந்த காமெடி திரைப்படங்கள் வரிசையில் கல்லா கட்டி களை கட்டும்....


 ஷாம் ஆண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்-நிக்கி கல்ராணி நடித்துள்ள தெலுங்கு பிரேம கதா சித்ரம் ரீ மேக் படமான  ..........டார்லிங் 

ஒரு கடலோர பண்ணை வீட்டில் ஊரைவிட்டு ஓடிவந்த நல்ல காதலர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்வதால் அந்த வீடு பேய் வீடு என்று அழைக்கப்படுவதாக துவங்கும் டார்லிங் படத்தின் கதையாக........

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும் கதிர் (ஜி.வி.பிரகாஷ்).......

 சினிமா இயக்குனர் ஆகமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும்  குமார் (பால சரவணன்)........

அக்கா வீட்டுகாரர் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும் நிஷா (நிக்கி கல்ராணி)..... 

என்ற மூவரும் தற்கொலைக்கு முன் காரில் ஒரு நீண்ட பயணம் மேற்கொள்ள....

போகும் வழியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன்  இருக்கும் காரின் குறுக்கே விழும் அதிசயராஜ் (கருணாஸ்) வுடன் அந்த கடலோர பண்ணை பேய் வீட்டில் தங்குகிறார்கள்

உண்மையில் கதிரின் தற்கொலை முயற்சியை தடுக்கவே அவரை காதலிக்கும் நிஷாவும் அவரது நண்பர் குமாரும்  கதிருடன் பின்தொடர்கிறார்கள் என்பது ஒரு திருப்பமாக...........  
குமார் கதிரையும் நிஷாவையும் நெருங்கிப்பழக முயற்சி செய்யும் போது நிஷா உடம்பில் ஒரு ஆவி குடியேறி கதிர் நிஷாவை தொடும் போதெல்லாம் தொடவிடாமல் கொலைவெறியுடன் தடுக்கிறது

கதிர்-குமார்-அதிசயராஜ் மூவரும் நிஷா மீது உள்ள ஆவியை விரட்ட கோஸ்ட் கோபால் வர்மா (நான் கடவுள் ராஜேந்திரன்) என்ற பேய்விரட்டியை அழைத்து முயற்சி செய்தும் முடியாமல்.....

கதிர் ஆவேசத்துடன் பேயிடம் வாக்குவாதம் செய்து அந்த ஆவியின் ஆவிக்கதையை பிளாஸ்-பேக் திருப்ப காட்சியாக.......

படம் ஆரம்பத்தில் ஊரை விட்டு ஓடி வந்த   நல்ல காதலர்கள் ஸ்ருதி-சிவா இருவரும் தஞ்சமடைந்த கடலோர பங்களாவீட்டில் அந்த ஊரைச் சேர்ந்த 5 பொறுக்கி வாலிபர்கள்  சிவாவின் கண்முன்னே ஸ்ருதியை பாலியல் வன்கொடுமை செய்து இருவரையும் கொலை செய்ததால்......

 
ஸ்ருதி ஆவி அந்த கடலோர பங்களாவிலேயே தங்கி அங்கே வரும் இளம் பெண்களுக்கு  பாதுகாப்பாக நம்ம அரசியல்வாதிகள் கூடவே இருக்கும் அல்லக்கைகள் போல இருக்கிறது

ஆவியின் கதையை அறிந்த கதிரும் அவனது நண்பர்களும் அந்த 5 பொறுக்கிகளையும் அந்த பங்களா வீட்டு வேலைக்காரன் உதவியுடன் கண்டுபிடித்து ஸ்ருதி ஆவியிடம் ஒப்படைத்து........

கதிரும் நண்பர்களும் நிஷாவுக்கு ஆவியிடமிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்களா..?   

நிஷா-கதிர் காதலில் இணைந்தார்களா...? என்பதை திரையரங்கில் காணுங்கள்

டார்லிங் படமும் யாமிருக்க பயமேன் படமும் பேய் திகில் காமெடி  படவரிசையில்  ஸ்ரிப்பூட்டும் படமாக இருந்தாலும்.

 டார்லிங் படத்தில் வரும் ஆவியின் பிளாஸ் பேக் கதை கூட்டு பாலியல் வன்கொடுமையைக் காட்டி சிரிக்க வைத்த பார்வையாளர்களை குற்றவுணர்வுடன் சிந்திக்க வைக்கிறது



காதல் தோல்வியில் சோகத் தாடியுடன் வரும்  ஜி.வி.பிரகாஷ் முகத்தில் உணர்வுப் பிரதிபலிப்புகள் காணவில்லை (போகப் போக ஜொலிப்பார் என்று நம்புவோமாக)

அதேநேரம் நிக்கி கல்ராணி அப்பாவி-ஆவி என்று இரு வேறுபட்ட உணர்வுகளை பிரதிபலிக்கிறார்

பேஸ்புக் அபிமானியாக பாலசரவணனும் வடிவேல் கெட்டப்பில் கருணாஸ்ம் படத்தின் காமெடி டோன் குறையாமல் கலக்குகிறார்கள்  

நான்கடவுள் ராஜேந்திரன்........
கொஞ்ச நேரமே கோஸ்ட் கோபால் வர்மாவாக வந்தாலும் ஐயம் வெயிடிங்....என்னம்மா இப்படி பண்ணுறீங்களே...போன்ற பஞ்ச வசனங்களால் காமெடிப்  பட்டாசை கொளுத்திப் போடுகிறார்   .  

ஆக மொத்தத்தில்..........

அறிமுக இயக்குனர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில் அரங்கம் அதிர பார்வையாளர்களை சிரிக்கவைத்து படைக்கும் இனிப்பு பொங்கல் விருந்து.... டார்லிங் 


  பார்வையாளர்கள் மதிப்பீடு..............









  டார்லிங்-படம் எப்படி இருக்கு..?




வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1