google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஆம்பள-சினிமா விமர்சனம்

Saturday, January 17, 2015

ஆம்பள-சினிமா விமர்சனம்



பழைய பித்தளை,அலுமினிய பாத்திரங்களுக்கு முலாம் பூசுவது போல் 90-களில் வந்த பழைய குப்பை கதைகளை தூசு தட்டி புதுசு போல விற்பனை செய்யும் சுந்தர் சி.....
ஆம்பள  படத்தில் அவரது பாச்சா பலித்ததா? என்பதை....

அரசியல்வாதிகளிடம் காசு வாங்கி கூட்டம் சேர்க்கும் புரோக்கராக விஷால் அறிமுகமாகும்   ஆம்பள படத்தின் கதையாக்........
 .
மதுரை அருகில் உள்ள ஒரு கிராமத்தின் பெரிய வீட்டுக்காரர் விஜயகுமாரை அவர்களது வேலைக்காரன் பசுபதி (பிரதீப் ரவாத்) கொலை செய்துவிட்டு பலியை அவரது மகன் ஆளவந்தான் (பிரபு) மீது போட்டுவிட.......

உண்மை தெரியாத பிரபுவின் மூன்று தங்கைகள் (ரம்யா,கிரண்,ஐஸ்வர்யா) ஆளவந்தானை புறக்கணித்து தனியாக வசதியாக தங்கள் கணவர்களை அடிமைகளாக்கி ஆணவமாக வாழ்கிறார்கள்

ஆளவந்தானுக்கு மூன்று மகன்கள் (விஷால்,வைபவ்,சதிஸ்) அவரது தங்கைகளுக்கும் தலா மூன்று மகள்கள் ( ஹன்ஷிகா,மதுரிமா,மாதவி லதா)

ஆளவந்தானின் மகன்கள் தந்திரமாக தங்களது அத்தைகளை மயக்கி அத்தை மகள்களை லவ்வ்வ்வுட்டி  பிரிந்த குடும்பத்தை இணைக்க முயலுகிறார்கள்

அரசியல் புரோக்கர் சரவணன் (விஷால் ) தன் அத்தை பெரிய பொண்ணு (ரம்யா)வை தேர்தலில் நிற்கும் வேலைக்காரன் பகவதியை எதிர்த்து போட்டியிட வைத்து....

 தன் நண்பன் போலிஸ் சந்தானத்தின் உதவியால்  பகவதியை தோற்க்கடிப்பதையும்........

விஷால்  ஆம்பள மாரி பசுபதிக்கு இரண்டு  அடிபோட்டு கொலையை ஒத்துக்கொள்ள வைப்பதையும்........

துட்டு கொடுத்து திரையரங்கில் போய் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்

படத்தின் சிரிப்பூட்டும் காட்சிகளாக......
-போலிஸ் சந்தானம் உயர் அதிகாரி மனோபாலாவின் பின்புறத்தில் சுட்டுவிட்டு வேலை சஸ்பென்ட் ஆவது 
-விஷால் தம்பிகளுடன் கோயில் திருவிழாவில் அத்தை மகள்களை கடத்துவதாக நினைத்து அத்தைகளை கடத்துவது   
-சந்தானம் RDX ராஜசேகராக வந்து பகவதியின் தேர்தல் பணம் வரும் லாரியை கடத்துவதும் விஷால் கவரில் ரம்யா படத்தை மாற்றி வைப்பதும் 

இப்படி சிரிக்க வைக்கும் காட்சிகள் சில இருந்தாலும் .......
கிரண்-சதிஸ் நடித்துள்ள வக்கிர காட்சிகளை இயக்குனர் சுந்தர் சி தவிர்த்திருக்கலாம் 
  இயக்குனர் சுந்தர்.சி.....இந்த பழைய பார்முலா கதையை சந்தானம் காமெடியை நம்பியும் சண்டை-டூயட் காட்சிகளுடன் முழுக்க முழுக்க தெலுங்கு காரமசாலா கலவையாக படம் காட்டுகிறார்
ஹரி என்ற புலியைப் பார்த்து முதுகில் சூடு போட்டுக்கொண்ட சுந்தர் சி பூனை


விஷால்.......என்னத்தச் சொல்றது? அடிக்கிறாரு....ஆடுறாரு..... பாடுறாரு.....  நடிக்கிறாரா? என்பது தெரியவில்லை

ஹன்ஷிகா...... பார்வையாளர்களை ஜொள்ளு விடவைக்கும் அம்மணி இந்தப்படத்தில் ஆம்பள விஷாலை ஜொள்ளுவிடுவது மாற்றம் ரசிகர்களுக்கு ஏமாற்றம்

சந்தானம்........RDX ராஜசேகர் என்ற போலீஸாக படத்தின் ஆரம்பத்திலும் கடைசியிலும் வந்து சிரிக்க வைக்க முயலுகிறார் சிலர் சிரிப்பார் சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்

இன்னும் ஒரு நடிகர் பட்டாளமே நடிக்க வந்தார்கள்....நடிப்பது போல நடித்தார்கள்

ஆக மொத்தத்தில்........
சுந்தர் சி யின் இயக்கத்தில் விஷால்-ஹன்ஷிகா நடித்துள்ள ஆம்பள திரைப்படம் எல்லா வயதினருக்கும் ஏற்ற தமிழ் பேசும் தெலுங்கு மசாலா சமத்துவ காமெடி திரைப்படம் என்று எழுத எனக்கும் ஆசைதான் ...

ஆனால் 


 சரி....இதுவரை படம் பார்த்தவர்கள் 
என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போமா?

ஆம்பள-படம் எப்படி இருக்கு...?



வாக்களிக்கும் அனைவருக்கும் நன்றி........



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1