நினைத்தது யாரோ-என்றும் காதல் புனிதமானது என்று சொல்லும் இயக்குனர் விக்ரமன் டச் திரைப்படம்... புல்லாங்குழல் தரும் மெல்லிசையாக ஒரு காதல் இசைக் காவியம்
காதலில் வஞ்சகமாக ஏமாற்றப்பட்ட மூன்று வாலிபர்கள் இரண்டு வாலிபிகள் காதல் என்றாலே காதல் அனுகுண்டைவிட கொடியது என்று தீர்மானித்து காதலர்களையும் காதலை ஆதரிப்பவர்களையும் கலாயித்து கொண்டு ஒரே அறையில் வாழ்கின்றார்கள்
ஒருநாள் காதல் திரைப்படங்களாக எடுக்கும் இயக்குனர் மோகன் (ரேஜித் மேனன்) என்பவரை பேட்டி எடுத்து கலாயிக்க அவர் தன் காதல் கதையை அவர்களுக்கு சொல்வது போல் படம் துவங்குகின்றது..........
மோகன் துணை இயக்குனராக இருக்கும் போது கவிதா (நிமிஷா) என்ற கல்லூரி மாணவி மீது காதல் கொள்ள....அவர்கள் காதலுக்கு கவிதாவின் பெற்றோரும் சம்மதிக்க.......சந்தர்ப்ப சூழ்நிலையால்தவறுதலாக மோகன் ஒரு பேருந்து எரிப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அடைகின்றார் பிறகு 6 மாதத்தில் நிரபராதியாக வெளிவரும் மோகன் கவிதாவுக்கு பெங்களூரில் ஒரு பணக்காரருக்கு திருமணம் முடிந்து விடுவதை அறிந்து டாஸ்மாகே தஞ்சமென்று தேவதாஸாக மாறிவிடுகிறார்........
மோகனின் பரிதாப நிலையை பார்த்து கவிதா கணவரிடம் டைவர்ஸ் செய்ததாக சொல்லி மோகனின் வாழ்க்கையில் மீண்டும் வந்து அவரை ஒர் இயக்குனர் ஆவதற்கு உதவுகின்றார் மோகனுக்குள் மீண்டும் காதல் மலர்கின்றது அவரும் இயக்குனர் ஆகிறார்
மீண்டும் மோகன்- கவிதா காதலில் இணைந்தார்களா...? என்பதை எதிர்பாராத திருப்பத்துடன் இயக்குனர் அவருக்கே உரிய இயக்கப்பாணியில் நளினமாக சொல்கின்றார்.........வெண்திரையில் பார்த்து மகிழுங்கள்
இயக்குனர் விக்ரமன் படத்துக்கு விமர்சனம் எழுதும் அளவுக்கு நான் அப்படியொன்றும் சிறந்த விமர்சனம் எழுதும் அனுபவப் பதிவர் அல்ல எந்த வணிக ரீதியான சமரசங்களுக்கும் அடிபணியாமல் தான் சொல்ல வந்த கதையை அழகாக,நிளினமாக,நாகரீகமாக....மீண்டும் நினைத்தது யாரோ திரைப்படம் மூலம் நிரூபித்திருக்கின்றார் இயக்குனர் விக்ரமன்
thanks-YouTube-by timesmusicsouth
நடிகர் ரேஜித் மேனன் அமைதியான காதலராக வந்து நடித்து அசத்துகின்றார் அவருக்கு இணையாக புதுமுகம் நிமிஷா சிறப்பிக்கின்றார் இனியா,மோனிகா,அமீர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க...பாலச்சந்தர்,பாரதிராஜா,பாண்டியராஜ்,ரவிகுமார், நடிகர்கள் சூர்யா,... என்று திரையுலக ஜாம்பவான்கள் இவர்களுடன் அமரர் இயக்குனர் மணிவண்ணன் அவர்களையும் ஒரு காட்சியில் காணும்போது மெய் சிலிர்க்கின்றது
thanks-YouTube-by timesmusicsouth
படத்தின் ஒளிப்பதிவும் பாடல்களும் மிகப் பெரிய பிளஸ் பாயின்ட் பால்ராஜ் இசையில் பாடல்கள் அத்தனையும் தேனிசை விருந்து ஒளிப்பதிவில் பிரதாப் காஷ்மீர் மலைப்பகுதிகளையும் பஹல்காம் கோயில் இயற்கை காட்சிகளையும் அட்டகாசமாக சுட்டு கண்களுக்கு விருந்தளிக்கின்றார்
எந்தவித விரசமான காட்சிகளும் இன்றி காதலை இப்படிகாவியமாய் பாடிய இயக்குனர் விக்ரமனின் நினைத்தது யாரோ..........ஒரு வித்தியாசமான அனுபவம்
புல்லாங்குழலிருந்து புறப்பட்டு வரும் மெல்லிசையாக திரையில் இயக்குனர் விக்ரமனின் நினைத்தது யாரோ படம் பார்த்தது மூங்கில் காட்டுக்குள் மல்லாக்கப் படுத்து நிலவின் ஒளியில் தென்றலின் தாலாட்டைக் கேட்டது போல் உள்ளது
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |