google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஜன்னல் ஓரம்-சினிமா விமர்சனம்

Wednesday, December 04, 2013

ஜன்னல் ஓரம்-சினிமா விமர்சனம்

ஜன்னல் ஓரம்- படம் பார்க்கும்போது வால்வோ ஏ.சி பஸ்ஸில் பயணிப்பது போல்  நல்லாத்தான் இருக்கு ஆனால் அப்புறம் யோசிச்சிப் பார்த்தால்....ஏதோ லொடலொட ஓட்ட பஸ்ஸில பயணித்து உடல் வலிப்பது போல் உள்ளம் நோகுது.......  

Made with .freeonlinephotoeditor.com

ஒரு சிறு கிராமத்தின் அன்றாட நிகழ்வுகளையும் கிராமத்து மனிதர்களின் எளிமையான வாழ்க்கையையும்  ஒரு பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து  பயணித்துக்கொண்டு காண்பது  போல் இருக்கும் என்று இயக்குனர் கரு.பழனியப்பன் சொல்வது .உண்மைதான்  ஆனாலும் நம்பகத்தன்மை இல்லாமல் சில நேரங்களில் தள்ளாடுகின்றது........ 
மற்றபடி ஜன்னல் ஓரம் திரைப்படம்.... ஒரு குறுநாவல் படித்த உணர்வு

jannaloram

மலையாள படத்தின் தழுவல் படம் என்றாலும் தமிழ்நாட்டு டாஸ்மாக் கலாச்சாரம் குறையாமல் இயக்குனர் நல்லாவே கதை சொல்கின்றார் பழனி டூ பண்ணைக்காடு அரசு பேருந்து ஓட்டுனர் கருப்பு (பார்த்திபன்) நடத்துனர் சுப்பு (விமல்) இருவரையும் சுற்றி பின்னப்பட்டுள்ள கதை இடைவேளைவரை குடியும் காதலுமாக சொல்லப்பட்டு... பிறகு ஒரு கொலை பின்னணியுடன் திருப்பங்கள் நிறைந்த சஸ்பென்ஸ்  படமாக மாற்றி பார்வையாளர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்குகின்றது...
ஆனால் அதுவும் கொஞ்ச நேரம்தான் அப்புறம் புஸ்....ஸ்....காற்று போன பஸ்............ஸ்.........அப்பாடா...... 

                                       thanks-YouTube-by tamizl.com

படத்தின் முன்னோட்ட காணொளியைக் கண்டால் ஆத்தோ... அப்பப்போ.... சித்தப்போ... என்று ஒரு பொம்மலாட்டம்   காட்டி படத்தில் பெருசா ஏதோ சொல்வதுபோல் இருந்தது ஆனால் கொஞ்சம் பூஸ்ட் குடித்துவிட்டு இயக்கியிருந்தால் நல்ல உற்சாகமாக இருந்திருக்கும் மலையாள தழுவல் என்பதினால் இப்படியோ...?பஸ்ஸில் ஜன்னல் ஓரம் அமர்ந்திருந்தால் எப்படி கண்ணைக்கட்டுமோ அப்படியிருக்கிறது சில நேரங்களில்............

Made with .freeonlinephotoeditor.com

பார்த்திபன்-படத்தில் குடிகார ஓட்டுனராக  நடித்துள்ள இவர் தான் குடிப்பதற்கான காரணமாக தனது ஊண முற்ற தங்கை கல்யாணம் காரணம் சொல்வது பரிதாபமாக  இருந்தாலும்  பேருந்து ஓட்டும்போது பயணிக்கும் பெண்களிடம் அதிலும் ஆற்றில் குளித்துவிட்டு பாவாடையில் வரும் பெண்களை  ஓட்டுனர் அருகில்...விட்டால் மடியில் உட்கார வைத்துக் கொள்வார் போல காட்டப்படுவது தமிழ் நாட்டில் எந்த ஊரில் இப்படி...?  என்னத்தச் சொல்றது....?


விமல்-அவருக்கே உள்ள அப்பாவித்தனமான சோம்பலாக நடிப்பது இப்படத்திலும் அதையே நன்றாக செய்துள்ளார்......பாடல் காட்சிகளில் காட்டும் முகபாவனையைஅப்படியே சோக காட்சியிலும் காட்டுவது சகிக்கவில்லை.....கொஞ்சம்  நடிங்க பாஸ் நாய் வேசம் போட்டா குறைக்கணும் .... ஊளையிடக் கூடாது.........ஆங் 

Made with .freeonlinephotoeditor.com

மனிஷா யாதவ்-கல்யாணியாக நடித்துள்ள இவர் கதாப்பாத்திரம் ஏனோ ஏனோதானோ என்று...? அதிலும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை நேக்கா பேசி ரிசார்ட்டில் தங்கவிடாமல் தன் வீட்டில் தங்க வைத்து பாட்டு பாடி ஆட்டம் போடுவது இங்கே எந்த ஊரில்....? அண்ணேன்...கரு.பழனியப்பன் அண்ணேன்....இன்னும் கொஞ்சம் நீட்டி முழங்கினா... இது கதாநாயகிய கில்மா பார்ட்டி மாதிரி காட்டியிருக்கும்

Made with .freeonlinephotoeditor.com

மற்றபடி அண்ணாசாராக நடித்துள்ள ராஜேஷ் அவரது மகன் சிவாவாக வரும் சஞ்சய் பாரதி, சிரிப்புக்கு சிங்கம்புலி ,ஜஸ்டினாக நடித்துள்ள ரமணா,நிர்மலா தேவியாக நடித்துள்ள பூர்ணா.....கொஞ்சம் மனதில் நிற்கின்றார்கள் ஆனால் விதார்த் (சாமி)  நடிப்பும் கதாப்பாத்திரமும்  படத்தில் எதிர்பாராதது... அதே நேரம் ஓவர் ஆக்டிங் போல் உள்ளது  

                                     thanks-YouTube-by Karupalaniappan

பாடல்கள் வித்யாசாகர் இசையில்  என்னடி என்னடி ஓவியமே....ரொம்ப நாளைக்குப் பிறகு கேட்ட நல்ல காதல் மெலோடி அர்பிந்து சாராவின் கேமெரா கைவண்ணம் படமுழுக்க மலைக் கிராமத்தை கண்களுக்கு குளிர்ச்சியாக படம் பிடித்துள்ளது. 

jannaloram


மலையாள ORDINARY படத்தை தழுவுகிறேன் என்று தமிழ் கலாச்சாரத்தை காறித் துப்ப வைக்கும் இயக்குனர் கரு.பழனியப்பன் அண்ணேன்... இனிமேல் இப்படி தழுவும் போது கொஞ்சம் உங்கள் மூளையை சலவை செய்து அழுக்கு இல்லாமல் வைத்துக்கொண்டு பார்வையாளர்களை மூளைச் சலவை செய்யுங்கள் இதில்வேறு கடைசியில் பாடம் நடத்துகின்றீர்கள்....பாவமா இருக்கு படம் பார்க்க  வந்த (அப்)பாவிகளை நினைத்து.........



(யோவ்...பதிவரே! நான் குடிச்சிக்கிட்டு பஸ் ஒட்டாதீங்கனு நல்லது சொன்னா இப்படி நக்கல் அடிக்கிற........அடுத்து ஷகிலா நடிச்ச மலையாள படத்த ரீமேக் பண்ணி   தமிழ் நாட்டு மக்களுக்கு புது கலாச்சாரத்த காட்ட போறேன்....அப்ப என்ன சொல்லுவ....? அவ்வவ....)

ஏலே....இவுரு செய்தாலும் செய்வாரு.............லே  எதுக்கும்  மக்கா...உஷாரா இருங்க..........லே
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1