(தீர்ப்பு- நிறைய சிரிக்க கொஞ்சம் சிந்திக்க என்றும் படம்காட்டும் பேண்டஸி காமெடி திரைப்படம்........நவீன சரஸ்வதி சபதம். குடி போதையில் மறை கழண்டவர்களுக்கு சினிமா போதையில் மறை கழண்டவர்கள் காட்டும் கூத்து)
கதை.......நவீன காலத்து சிவலோகத்தில் சிவ பெருமான் நாரதரிடம் தன் திருவிளையாடலுக்கு நான்குமனிதப் பூச்சிகளை பிடித்துவரச் சொல்ல...நாரதர் பிடித்து வந்த நான்கு குடிகார நண்பர்களை சிவபெருமான் தன் திருவிளையாடலாக அவர்களை பூலோகத்தில் உள்ள ஒர் ஆள் அரவமில்லாத தீவில் ஆறுமாதங்களாக அடைத்துவைக்க......அவர்கள் குடியின் தீமையை உணர்ந்தார்களா...? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கின்றார்கள்
படம் துவங்கும்போதே பிரபஞ்சத்தைக் காட்டி நமக்கு இது பேண்டஸி படம் உங்க காதை கொஞ்சம் கொடுங்கள்......நிறைய பூ சுற்றப்போகிறோம் என்று எழுத்து-இயக்கம் K.சந்துரு கேட்டுக்கொள்வது போல் உள்ளது...
அப்படியே ஐபேடு உடன் விளையாடும் முருகன்,டிரெட்மிலில் உடலைக்குறைக்கும் பிள்ளையார்,தமிங்கலீஷ் பேசும் பராசக்தி(தேவதர்ஷனி),கிட்டாருடன் வரும் நாரதர்(மனோபாலா),கணனியில் படம்பார்க்கும் சிவபெருமான் என்று படு அமர்களமாக சிரிப்பு காட்டி..........
செக்ஸ் சித்தவைத்தியர் ஜெய்,சொர்ணக்காவிடம் புருசனாக மாட்டிக்கொண்ட VTV கணேஷ்,ஊழல் அரசியல்வாதி MLA-வின் மகன் சத்யன்,வெங்கட் பிரபுவிடம் சினிமா ஹீரோவாக சான்ஸ் கேட்கும் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ராஜ்குமார்.....இவர்களைப் பற்றி நாரதர் சிவபெருமானிடம் பெரிய குடிகாரர்களாக அறிமுகப் படுத்த.....
அதிலும் ஜெய் இரண்டு வருடமாக காத்திருந்து காதலிக்கும் நிவேதா தாமஸ் கல்யாணத்திற்கு முன்பு பேச்சலர்ஸ் பார்டிக்காக பாங்காக் போய் ஒருவாரம் தண்ணியடித்து கொண்டாட செல்வதும்.......அங்கே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு......
அவர்கள் ஒரு தீவில் அகப்பட்டுக்கொள்கிறார்கள் அங்கே இருந்து எப்படி தப்பி வந்தார்கள் என்பதையும் அந்த ஆறு மாத இடைவெளியில் அவர்கள் வீட்டில் என்ன மாற்றங்கள் நடந்தது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றார்கள் (சந்த்ரு அண்ணேன்...அதுக்காக சிவபெருமானே கார் டிரைவராக வருவதெல்லாம் ரொம்ப ஓவர் கற்பனை....அவ்வவ்)
படத்தின் இயக்குனர் சந்துருவை பாராட்டவேண்டும் இப்படி வித்தியாசமான கற்பனைக்கும் அப்படியே சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க நினைத்ததற்கும் படம் கதை சொன்ன விதம் அருமை
எழுத்தில் நல்ல நையாண்டித்தனங்கள் மிளிர்கின்றது (எ.கா.) மனோபாலா சினிமா விமர்சனம் (FIRST HALF IS SUPER..SECOND HALF IS MOKKAI ) எழுதும் ட்விட்டர்களையும் முகநூல்வாசிகளையும் கலாயிப்பது.இப்படி பேண்டஸி படம் எடுப்பவர்கள் பார்வையாளர்களை தங்கள் பிடியிலிருந்து கொஞ்சமும் நகர விடமாட்டார்கள்.. மெஸ்மரிசம்...அந்த வேலையை சரியாக செய்துள்ளார்....கொஞ்சம் காதல் நிறைய காமெடி என்று.
சிறப்பான கட்சிகள் படத்தில் நிறைய உள்ளன ஜெய் அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார் காதல் பாடல்களில் வழக்கம் போல் ஜொலிக்கிறார்.கணேஷ் நடிப்பு அதிகம்...அதிலும் சொர்ணக்கா பொண்டாட்டியிடம் அவர் படும் கஷ்டம்...அப்புறம் தீவில் மண்டையில் தேங்காய் அடிபட்டு சரஸ்வதி சபதம்சிவாஜி போல் நடிப்பது...நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி போல் பேசுவது என்று இவருக்கு நடிக்க நிறைய...மற்றவர்களையும் குறை சொல்ல எதுவுமில்லை (வரிசையாக நிறைய பேண்டஸி படங்கள் பார்த்து எனக்கும் கொஞ்சம் நடுவுல நிறைய பக்கங்கள் காணாமல் போகின்றன......ஹி..ஹி)
பிரேம் குமார் இசயில் பாடல்கள்........காத்திருந்தாய் அன்பே.... கேட்பதற்கு இனிமை என்றால் கானா பாலாவின் வாழ்க்கை ஒரு....பாடல் காமெடி..நெஞ்சுக்குழி....சோகம் கலந்த பாடல் ஆயினும் காட்சியமைப்பு ஆனந்த் ஜீவாவின் கேமரா அருமை
இப்போதெல்லாம் சினிமாவுக்கு கதை கிடைக்காதவர்கள் எதையாவது படம் எடுத்துவிட்டு அதைப் பேண்டஸி என்று சொல்லிவிடுகின்றார்கள் ஆனாலும் விரசமான இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு குதியாட்டங்கள்,காதல் என்ற பெயரில் வாய் ஒட்டிக்கொள்ளும் முத்தங்கள்....
இப்படி எந்த சினிமா கன்றாவிகளும் இல்லாத இப்படத்தை குடும்பத்துடன் குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம் (ஆனால் கெட்டதைக் காட்டி நல்லது சொல்லும் இந்தப் படத்தைப் பார்த்து குழந்தைகள் யாரும் கெட்டுப் போகாமல் இருந்தால் சரிதான்....)
கதை.......நவீன காலத்து சிவலோகத்தில் சிவ பெருமான் நாரதரிடம் தன் திருவிளையாடலுக்கு நான்குமனிதப் பூச்சிகளை பிடித்துவரச் சொல்ல...நாரதர் பிடித்து வந்த நான்கு குடிகார நண்பர்களை சிவபெருமான் தன் திருவிளையாடலாக அவர்களை பூலோகத்தில் உள்ள ஒர் ஆள் அரவமில்லாத தீவில் ஆறுமாதங்களாக அடைத்துவைக்க......அவர்கள் குடியின் தீமையை உணர்ந்தார்களா...? என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கின்றார்கள்
படம் துவங்கும்போதே பிரபஞ்சத்தைக் காட்டி நமக்கு இது பேண்டஸி படம் உங்க காதை கொஞ்சம் கொடுங்கள்......நிறைய பூ சுற்றப்போகிறோம் என்று எழுத்து-இயக்கம் K.சந்துரு கேட்டுக்கொள்வது போல் உள்ளது...
அப்படியே ஐபேடு உடன் விளையாடும் முருகன்,டிரெட்மிலில் உடலைக்குறைக்கும் பிள்ளையார்,தமிங்கலீஷ் பேசும் பராசக்தி(தேவதர்ஷனி),கிட்டாருடன் வரும் நாரதர்(மனோபாலா),கணனியில் படம்பார்க்கும் சிவபெருமான் என்று படு அமர்களமாக சிரிப்பு காட்டி..........
செக்ஸ் சித்தவைத்தியர் ஜெய்,சொர்ணக்காவிடம் புருசனாக மாட்டிக்கொண்ட VTV கணேஷ்,ஊழல் அரசியல்வாதி MLA-வின் மகன் சத்யன்,வெங்கட் பிரபுவிடம் சினிமா ஹீரோவாக சான்ஸ் கேட்கும் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் ராஜ்குமார்.....இவர்களைப் பற்றி நாரதர் சிவபெருமானிடம் பெரிய குடிகாரர்களாக அறிமுகப் படுத்த.....
அதிலும் ஜெய் இரண்டு வருடமாக காத்திருந்து காதலிக்கும் நிவேதா தாமஸ் கல்யாணத்திற்கு முன்பு பேச்சலர்ஸ் பார்டிக்காக பாங்காக் போய் ஒருவாரம் தண்ணியடித்து கொண்டாட செல்வதும்.......அங்கே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு......
அவர்கள் ஒரு தீவில் அகப்பட்டுக்கொள்கிறார்கள் அங்கே இருந்து எப்படி தப்பி வந்தார்கள் என்பதையும் அந்த ஆறு மாத இடைவெளியில் அவர்கள் வீட்டில் என்ன மாற்றங்கள் நடந்தது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றார்கள் (சந்த்ரு அண்ணேன்...அதுக்காக சிவபெருமானே கார் டிரைவராக வருவதெல்லாம் ரொம்ப ஓவர் கற்பனை....அவ்வவ்)
படத்தின் இயக்குனர் சந்துருவை பாராட்டவேண்டும் இப்படி வித்தியாசமான கற்பனைக்கும் அப்படியே சிரிக்க வைத்து சிந்திக்க வைக்க நினைத்ததற்கும் படம் கதை சொன்ன விதம் அருமை
எழுத்தில் நல்ல நையாண்டித்தனங்கள் மிளிர்கின்றது (எ.கா.) மனோபாலா சினிமா விமர்சனம் (FIRST HALF IS SUPER..SECOND HALF IS MOKKAI ) எழுதும் ட்விட்டர்களையும் முகநூல்வாசிகளையும் கலாயிப்பது.இப்படி பேண்டஸி படம் எடுப்பவர்கள் பார்வையாளர்களை தங்கள் பிடியிலிருந்து கொஞ்சமும் நகர விடமாட்டார்கள்.. மெஸ்மரிசம்...அந்த வேலையை சரியாக செய்துள்ளார்....கொஞ்சம் காதல் நிறைய காமெடி என்று.
சிறப்பான கட்சிகள் படத்தில் நிறைய உள்ளன ஜெய் அலட்டல் இல்லாமல் நடித்துள்ளார் காதல் பாடல்களில் வழக்கம் போல் ஜொலிக்கிறார்.கணேஷ் நடிப்பு அதிகம்...அதிலும் சொர்ணக்கா பொண்டாட்டியிடம் அவர் படும் கஷ்டம்...அப்புறம் தீவில் மண்டையில் தேங்காய் அடிபட்டு சரஸ்வதி சபதம்சிவாஜி போல் நடிப்பது...நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி போல் பேசுவது என்று இவருக்கு நடிக்க நிறைய...மற்றவர்களையும் குறை சொல்ல எதுவுமில்லை (வரிசையாக நிறைய பேண்டஸி படங்கள் பார்த்து எனக்கும் கொஞ்சம் நடுவுல நிறைய பக்கங்கள் காணாமல் போகின்றன......ஹி..ஹி)
பிரேம் குமார் இசயில் பாடல்கள்........காத்திருந்தாய் அன்பே.... கேட்பதற்கு இனிமை என்றால் கானா பாலாவின் வாழ்க்கை ஒரு....பாடல் காமெடி..நெஞ்சுக்குழி....சோகம் கலந்த பாடல் ஆயினும் காட்சியமைப்பு ஆனந்த் ஜீவாவின் கேமரா அருமை
இப்போதெல்லாம் சினிமாவுக்கு கதை கிடைக்காதவர்கள் எதையாவது படம் எடுத்துவிட்டு அதைப் பேண்டஸி என்று சொல்லிவிடுகின்றார்கள் ஆனாலும் விரசமான இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாட்டு குதியாட்டங்கள்,காதல் என்ற பெயரில் வாய் ஒட்டிக்கொள்ளும் முத்தங்கள்....
இப்படி எந்த சினிமா கன்றாவிகளும் இல்லாத இப்படத்தை குடும்பத்துடன் குழந்தைகளுடன் கண்டுகளிக்கலாம் (ஆனால் கெட்டதைக் காட்டி நல்லது சொல்லும் இந்தப் படத்தைப் பார்த்து குழந்தைகள் யாரும் கெட்டுப் போகாமல் இருந்தால் சரிதான்....)
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |