google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ரகளபுரம்-சினிமா விமர்சனம்

Saturday, October 19, 2013

ரகளபுரம்-சினிமா விமர்சனம்


இயக்குனர் மனோவின் ரகளபுரம்.......வழக்கமான மட்டமான காமெடி படங்கள்  வரிசையில் வந்துள்ள பொழுதுபோக்கு படம் என்பதைவிட... காசு செழிப்பானவர்கள் ரகளபுரம் அரங்கில் உண்டியல் போட்டுவாருங்கள்.......பாவம் அவர்கள் பிழைத்துப்போகட்டும்

freeonlinephotoeditor

படத்தின் கதை.......கோழையான போலீஸ் ஒருவர் தனக்கு இரத்த புற்று நோய் என்று நினைத்து தனது குடும்பத்தைக் காக்க காப்பீடு எடுத்து குற்றவாளிகளால் (தற்) கொலைக்கு  முயலும் நிகழ்வாக...... 

freeonlinephotoeditor

தனது போலீஸ் தந்தை இறப்பால் போலீஸ் வேளையில் சேரும் பயந்தாங்கொள்ளி போலீஸ் வேலு (கருணாஸ்) கதாப்பாத்திரம் இதற்கு முன்பு நாம் நிறைய தமிழ் படங்களில் பார்த்து சலித்த காமெடி........வேட்டை படத்தில் மாதவன் அப்புறம் அவசர போலீஸ் 100 படத்தில் பாக்யராஜ்.....இந்த வரிசையில் ரகளைபுரம்   கருணாஸ்...ஆனால் கடைசிவரையில் இவர் கோழை போலீஸ் என்பதுதான் வித்தியாசம்

freeonlinephotoeditor

இரத்த பரிசோதனை நிலையத்தில் நடந்த குளறுபடியில் வேலு தனக்கு இரத்தப் புற்று நோய்  என்று தவறாக நினைத்து...........தனக்கு  பிறகு தன் வயதான தாயார் மற்றும் இரண்டு தங்கைகளைக்  காக்க காப்பீடு மூலம் பணம் கிடைக்க நினைத்து காப்பீடு செய்துகொள்கிறார்......கோழையான அவர் குற்றவாளிகளுடன் மோதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்கிறார்....

freeonlinephotoeditor

ஆனால் அவரது திட்டங்கள் கோழையான அவரை வீரராக வெளியுலகத்தின் கண்களுக்கு காட்டுகிறது...அவர் மீது கல்யாணி (அங்கேனா ராய்) யின் காதல் பார்வை விழுகிறது.......
இதற்கிடையில் பயங்கரவாதிகள்...மாபியா கும்பல்...வெடி மருந்து கடத்தல்வாதிகள்....என்று அடுக்கடுக்கான ஆபத்தான சந்தர்ப்பங்களை அவர் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில்....அவர் திட்டமிட்ட மரணத்தை தழுவினாரா....? அவர் விரும்பியபடி அவரது குடும்பத்துக்கு காப்பீடு பணம் கிடைத்ததா....? என்ற மாபெரும் கேள்விக்கு திரையில் தெரிந்துகொள்ளுங்கள் 

freeonlinephotoeditor

படத்தில் நிறைய கழிசடை.....மட்டமான காமெடிக்  காட்சிகள் உள்ளன....கோழை போலீஸ் வேலு பயத்தில் பேண்டில் உச்சா போகும் காட்சி ஒன்றே படத்தின் தரத்திற்கு நல்ல உதாரணம் ..........

இயக்குனர் மனோ ஏனோதானோ என்று ஏதோ கதை எழுதி நம்ம காசை புடுங்குகிறார்..அதற்கு  வீணாப்போன நடிகர்கள் கருணாஸ்...கோவை சரளா உடந்தை..........காசு செழிப்பானவர்கள் ரகளபுரம் அரங்கில் உண்டியல் போட்டுவாருங்கள்.......பாவம் அவர்கள் பிழைத்துப்போகட்டும்.............பிச்சையெடுக்கும் சினிமாவாதிகள்

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1