google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ராஜா ராணி-சினிமா விமர்சனம்

Friday, September 27, 2013

ராஜா ராணி-சினிமா விமர்சனம்


(தீர்ப்பு-நிறைய காதல்+கொஞ்சம் காமெடி....காதலுக்கு புதிய தத்துவம் சொல்லி...காதல் செத்துப்போனால் கலங்க வேண்டாம் யாரையாவது கட்டிக்கொண்டு மீண்டும் காதலியுங்கள்...? என்று சொல்லாமல் சொல்லும் நவீன தேவதாஸ் காதல் திரைப்படம்..........நீளப்பதிவு...)

http://chennaionline.com/images/articles/August2013/043db2a8-fb87-48af-9bb6-d424200f8a47OtherImage.jpg

படம் ஆரம்பமே சர்ச்சில் நடக்கும்  செல்வந்தர் ஜேம்ஸ் (சத்தியராஜ்) மகள் ரெஜினா (நயன்தாரா)-வுக்கும் ஜான்(ஆர்யா)-வுக்கும் திருமணம்.........
ஜானாகிய நான் ரெஜினாவை மணந்துக்கொள்ள சம்மதிக்கிறேன் என்று ஜான் சொல்ல...ரெஜினாவாகிய  நான் சூர்யா(ஜெய்)-வை மணந்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று ரெஜினா சொல்ல....அதிர்ச்சியில் ஜேம்ஸ் மயங்கி விழ..

மீண்டும் திருச்சபையில் மன்னிப்புடன் ரெஜினா.....
ரெஜினாவாகிய நான் ஜானை மணந்துகொள்ள சம்மதிக்கிறேன் என்று சொல்ல....அடாடா...என்று நாம்  அப்போது திறந்த வாயை மூட முடியாமல் ஜொள்ளு வடிய...ஆரம்பிக்கும் படம் பல காதல் திருப்பங்களுடன்......


திருமணத்திற்குப் பிறகு ஜானும் ரெஜினாவும் மிக்கி-மவுஸ் போன்று வீட்டுக்குள் மோதிக்கொள்ள....ஒரு கட்டத்தில் ரெஜினாவுக்கு வலிப்பு வர...ரெஜினா-சூர்யா  காதல் ஜானுக்கு தெரிய வருகிறது
இன்னொரு கட்டத்தில் ஜானின் நண்பன் சாரதி(சந்தானம்) மூலம் ரெஜினாவுக்கும்  .........ஜான்-கீர்த்தனா (நஸ்ரியா நஸிம்) காதல் தெரிய வர...அங்கே ஒரு ட்விஸ்ட்.......ரெஜினாவுக்கு ஜான்மீது காதல் வர....

http://i1.ytimg.com/vi/oSW8l4nRpQw/hqdefault.jpg

இன்னொரு மிகப்பெரிய காதல் திருப்பமாக....இறந்து போனதாக நினைத்துக் கொண்டிருக்கும் சூர்யா உயிருடன் இருப்பதை  ஜானைப் பிரிந்து ஆஸ்ட்ரேலியா செல்ல நினைக்கும் ரெஜினா விமான நிலையத்தில்   சூர்யாவை உயிருடன் சந்திக்க...........கிளைமாக்ஸ்

முதலில் திருமணம் செய்து கொண்ட ரெஜினாவும் ஜானும் இணைந்தார்களா...? இல்லையேல் ரெஜினா மீண்டும் சூர்யாவுடன் போய் இணைந்து கொண்டாளா...? இந்த மாபெரும் கேள்விக்கு விடைவேண்டுமா...? வெள்ளித்திரையில் பாருங்கள்.

freeonlinephotoeditor


இயக்குனர் அட்லியை பாராட்ட வேண்டும்....கதாப்பாத்திரங்களை நடிக்க விடாமல் அப்படியே நிஜமாக அறிமுகப்படுத்தியுள்ளதற்கு....... நயன்தாராவின் கதாப்பாத்திரம் அப்படியே நிஜத்தின் பிரதிபலிப்பு... இப்படியொரு இரட்டைக்காதலை தேர்வு செய்து படமுழுக்க காதல்...காதல்...காதல் அப்படியே இடையிடையே சந்தானத்தை வைத்து கொஞ்சம் காமெடிக் கூத்து.

http://timesofindia.indiatimes.com/photo/20713983.cms

நயன்தாரா......அப்படியே படமுழுக்க  நிஜமாக காதலில் வாழ்ந்திருக்கிறார்... நடிக்கவில்லை ஆனால்.. ஜெய்யுடன்   காதலிக்கும் போது ஆண் பாலியல் வன்கொடுமை (அப்படியொன்று இருந்தால்...) போல் தெரிகிறது
rajarani


ஆர்யா......பல்வேறு பாவனை முகத்தில் காட்டி காதலிக்கிறார்...நஸ்ரியா வீட்டு நாய்க்கு பிஸ்கட் போட்டு ஒரே வாரத்தில் அம்மணி கழுத்தில் தாலி கட்டுகிறார்...அய்யோ பாவம் அவர் கண் முன்னாடியே அம்மணியை விபத்தில் பறிகொடுக்கிறார்

ஜெய்-நஸ்ரியா படத்தில் துனைப்பாத்திரங்களாக வந்து இளமைத்துடிப்புடன் அவர்கள் வேலையை சரியாக செய்கிறார்கள்....
சந்தானம்........படத்தின் உண்மையான கதாநாயகன்...இல்லையேல் படம் திசை மாறி போயிருக்கும்....ஆனால் உண்மையில்  படத்தில் வரும் அபார்ட்மென்ட் நாயும் ஆர்யாவின் கையில் உள்ள காரச்சேவும் நல்லாத்தான் காமெடி செய்கிறது

இசை -ஜீ.வி.பிரகாஷ்........பாடல்கள் கேட்கும்படி உள்ளன..அதிலும் கானா பாலாவின் ஹே...பேபி.. பாடல் சூப்பர்... பாடல்களுக்கு ஏற்ப ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு புதுமையாகவும்  வித்தியாசமாகவும் உள்ளது..


                               thanks-YouTube-byFoxStarIndia FoxStarIndia

ஆக........காதலுக்கு புதிய தத்துவம் சொல்லி...காதலில் தோல்வியுற்றால்....கலங்க வேண்டாம் யாரையாவது கட்டிக்கொண்டு மீண்டும் காதலியுங்கள்...? என்று சொல்லாமல் சொல்லும் நவீன தேவதாஸ் காதல் திரைப்படம்........படம் பார்க்கும் போது எனக்கு மௌனராகம்..அந்த 7 நாட்கள் படங்கள் நினைவு வந்தது...பிரமையோ?

நான் படம் பார்த்த  கோல்மால் திரையரங்கில்...கூட்டமோ கூட்டம் காதலர்கள் கூட்டம்...படம் முடிந்து அரங்கை விட்டு வெளியே வரமுடியவில்லை ..அப்புறம்தான் தெரிந்தது வாசலில் வீடியோவுடன் படம் எப்படிங்க...? கோஷ்டிகேமராவால் சுட்டுக்கொண்டு நிற்க...பாவம் காதலர்களோ முகத்தை மூடிக்கொண்டு பதுங்கி நிற்க...நான் எப்படியோ தப்பி வெளியே வந்து விட்டேன்.......இளைய மக்கள் ரசனை இப்படி இருக்க ஏன்தான் இவர்கள் தங்கமீன்கள்...மெழுகுவர்த்திகள் எடுத்து உருகி.....    

இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1