இருள் சூழ்ந்த வானில்தான்
நட்சத்திரங்கள் ஜொலிக்கும்
உன் ஒளிவீசும் முகத்தில்
ஜொலிக்கும் இவைகள்
விழிகளா? வைரங்களா?
உன் துள்ளும் இளமையை
தொட்டதாலே...
உன் தங்க மேனியில்
தவண்டதாலே....
களையிழந்து போயின
நீ அணிந்த தங்க நகைகள்!
அங்கே இங்கே
அசைந்தாடும் காதணிகள்
இவளிடம் தோற்றோமே..!
இசைக்கின்றன முகாரி!
விட்டால் போதுமென்று
கழன்று விழும் கவலையில்
காரிகையே!..
உன் கை வளையல்கள்!
உன் ஒளிரும் முகத்தில்
மிளிரும் நேற்றிச்சுட்டி
இல்லையே தன் முகத்தில்
என்றுதான் அழுததோ..
அழுதுதான் தேய்ந்ததோ...
அந்த வானத்து வெண்ணிலவு?
இயற்கையிலேயே
அன்பே! நீ பேரழகி!
இன்னும் வேண்டுமோ
இந்த நகைகள் உனக்கு?
கள்வர்கள் கண்டால்
வழிப்பறி தொல்லை உனக்கு?
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |