அந்தச் சிலை செதுக்கும்
சிற்பி முன்னே
அன்பே! நீ
சிலிப்பிக்கொண்டு நிற்காதே!
அரையும் குறையுமாய்
மூடிய ஆடைக்குள்
மறைந்தும் மறையாமலும்
அடங்காமல் திமிரும்
உன் அங்கங்களின்
அழகைக் கண்டால்..
மதம் கொண்டவனாய்
மாறிவிடுவான்.
அவன் செதுக்கிய
சிங்காரி சிலைகளை
அடித்து நொறுக்குவான்...
அவைகளுக்கு இல்லை
உன் அங்கங்களின்
அபரித அழகு என்று.
thanks-image from en-wiki
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |