google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: ஓரப்பார்வை

Wednesday, December 19, 2012

ஓரப்பார்வை


         

















  






          

      
  

நீ
பாதித் திறந்த விழியால்
பார்க்கும் போதே..
என் முழு உடலும்
பற்றி எரிகிறதே..

இது
காதல் பார்வையா?
காம பார்வையா?

இரவும் இல்லாமல்
பகலும் இல்லாமல்
இடைப்பட்ட வேளை...
ஒளியும் இருளும்
ஒன்றாய்க் கலந்தது போல்...

மூடியும் மூடாமலும்
உன் இமைகள் செய்யும் மாயை!
இப்பிறவியில்
இல்லை எனக்கு
இன்னொரு வாழ்க்கை!

thanks-img-venkia.com
அன்பே!
அரைக் குறையாய்
உன் மூடிய விழிகளை
உடனே திறந்து விடு!
உன் ஓரப்பார்வையை
உடனே நிறுத்திவிடு!
என் உயிர் அழிவதை
உடனே காத்திடு!



இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1