google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: கைபேசி காதலி!

Friday, December 14, 2012

கைபேசி காதலி!








                          === காமத்துப்பால் தந்த கவிதைகள்-9 ===

ஆயிரம் எஸ்எம்எஸ்
அனுப்பி விட்டேன்
ஆனாலும் வரவில்லை....
அவரிடமிருந்து அழைப்பு!

ஆயிரம் மிஸ்டு கால்
அனுப்பி விட்டேன்
ஆனாலும் வரவில்லை....
அவரிடமிருந்து அழைப்பு!

ஏவுகணையை விட வேகமாக
என் அழைப்பை எடுத்துச் செல்லும்
என் கைபேசி இருந்தும் கூட...

என் காதலை நினைக்க மறந்த  
என்னவரை நினைத்து
என் இதயமே!
ஏன் நீ துடிக்கிறாய்...?

என் கைபேசிதான் தவறென்று
எண்ணித்தான் துடிக்கிறாயோ...?
என்றும் நீ வாழ்க நீடூழி!   

இக்கவிதையின் மூலம்....
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.....குறள்-1242



கலைஞர் உரை:
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க.
thanks-source from here  
thanks-top img from here 
thanks-bgd img from here 
 **********************************************************


                      thanks-YouTube-by sothumaadu

thanks-soundcloud  by Warrior Flute
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1