=== காமத்துப்பால் தந்த கவிதைகள்-9 ===
ஆயிரம் எஸ்எம்எஸ்
அனுப்பி விட்டேன்
ஆனாலும் வரவில்லை....
அவரிடமிருந்து அழைப்பு!
ஆயிரம் மிஸ்டு கால்
அனுப்பி விட்டேன்
ஆனாலும் வரவில்லை....
அவரிடமிருந்து அழைப்பு!
ஏவுகணையை விட வேகமாக
என் அழைப்பை எடுத்துச் செல்லும்
என் கைபேசி இருந்தும் கூட...
என் காதலை நினைக்க மறந்த
என்னவரை நினைத்து
என் இதயமே!
ஏன் நீ துடிக்கிறாய்...?
என் கைபேசிதான் தவறென்று
எண்ணித்தான் துடிக்கிறாயோ...?
என்றும் நீ வாழ்க நீடூழி!
இக்கவிதையின் மூலம்....
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.....குறள்-1242
thanks-soundcloud by Warrior Flute
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |