google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: காதல் தீ!

Friday, December 07, 2012

காதல் தீ!



எனக்கே தெரியாமல்
என்னுள் எரியும் தீ!
காதல் தீ! காதல் தீ!
என்னுள் எரிகிறதே!
என் இதயம் எரிகிறதே...!

என்னுள் எரியும் தீயே!
என் காதல் தீயே!
உன்னை
என்ன செய்வது என்று
எனக்குத் தெரியவில்லை...?
உன்னை என்னால்
அனைக்க முடியவில்லை...!
உன்னை என்னுள் பற்றவைத்த
அவன் இங்கே வருவானா...?
என்னை அனைத்து.....
என்னுள் எரியும்
இந்தக் காதல்தீயை
அனைப்பானா...?
அவனிடமும் சொல்ல
எனக்குத் தெரியவில்லை!


அவனுள்ளும்
இந்தக் காதல் தீயா...?
எரியும் இரண்டு இதயங்களும்
இணைந்து கொண்டால்
என்னவாகும்? 

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்......(குறள்-1162)





நன்றி-கலைஞர் உரை:
காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை.



thanks-thirukkural.com
thanks-images from here
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1