யாரைத் தேடி
இருண்ட வானில்
நட்சத்திரங்களின் நர்த்தனம்..?
யாரைத் தேடி
புல்வெளி மேடையில்
பணித்துளிகளின் நாட்டியம்...?
யாரைத் தேடி
அடர்ந்த காட்டுக்குள்
மூங்கில்களின் முகாரி..?
யாரைத் தேடி
ஓடும் நீரோடையில்
துள்ளிக் குதிக்கும் மீன்கள்...?
யார் வரவால்
நின்று போன
என் இதயம் துடிக்குமோ...?
thanks-images from here
thanks-sound cloud-Aval oru by Parithi Muthurasan
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |