மைதீட்டிய
உன் இரு விழிகளில்
குத்தீட்டியாய் ஓன்று...
என் இதயத்தைத் துளைத்து
காதல் நோயைத் தந்ததே!.
அன்பே!
உன் இன்னொரு விழியோ
மயிலிறகின் மென்மையாய்
காதல் நோயால் கருகிய
இதயத்தை இதமாகத் தழுவி
மருந்திட்டு மகிழுதே!
இன்பத்தையும் துன்பத்தையும்
இரு விழிகளாய் கொண்டவளே!
இல்லை எனக்கு
இரண்டு இதயங்கள்!
ஓன்று உனக்கு
காதலைத் தீமூட்டும்
அக்னி கண்!
இன்னொன்று
பற்றி எரியும்
என் இதயத் தீயை
அனைக்க வல்ல...
(பொறுத்திரு பெண்ணே!
அகராதியை புரட்டுகிறேன்
அர்த்தமுள்ள வார்த்தைக்கு...)
மையிட்ட...
அது
மழை பொழியும்
கருமேக விழியா...?
thanks-yousaytoo
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |