இப்போதெல்லாம்
இரவில் மட்டுமே
நடமாடுகிறேன் பேய் போல...
சுட்டெரிக்கும் சூரியன்
என்னுள் ஒளிந்திருக்கும்
என்னவளின் இதயம்தான்
வெயிலில் கருத்து விடுமோ? என்று.
இப்போதெல்லாம்
எப்போதாவதுதான் குளிக்கிறேன்
அப்போதுகூட அழுக்கு போக
அழுந்த தேய்த்து குளிப்பதில்லை....
என்னுள் ஒளிந்திருக்கும்
என்னவளின் இதயம்தான்
அழுத்தத்தில் தேய்ந்துவிடுமோ? என்று.
இப்போதெல்லாம்
மாநகராட்சியின்
குப்பை வண்டியைக் கண்டால்...
(அதற்கும் மேல்...
மாநகராட்சி குப்பைத்தொட்டிகள்...
என்னதான் புதைந்திருக்கோ?)
நாசியைப் பிடித்துக்கொண்டு
காத தூரம் ஓடுகிறேன்..
என்னுள் ஒளிந்திருக்கும்
என்னவளின் இதயம்தான்
நாற்றத்தால் வாடிவிடுமோ? என்று.
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |