சிறுவயதிலேயே அவனுக்கு
சின்னஞ்சிறு விசயங்களுக்கு
அளவிட முடியாத கோபம்
எதிரில் இருக்கும் பொருட்களை
எட்டி உதைப்பான் உடைப்பான்
எதிரில் இருப்போர் எவராயினும்
ஏளனமாகப் பேசுவான் ஏசுவான்
அவனது தந்தை
அவனிடம் சொன்னார்
ஓர் ஆலோசனை-
“ஆத்திரம் வரும்போது
ஒரு சுத்தியலையும்
சில ஆணிகளையும்
எடுத்துச் சென்று
வீடு முன் நிற்கும்
மரத்தின் மீது
ஆத்திரம் தீரும் வரை
அடி...அடி...ஆணி அடி”
அப்படியே அவனும் செய்து
ஆத்திரமும் குறைந்து
அவனும் மாறிவிட்டான்
அமைதியானவனாக
காலங்காலமாக சொல்லப்படும்
நீதி நெறிமுறைக் கதை
நடத்தைச் சார்பான
ஒழுக்கம் சார்ந்த கதை
இந்தக் காலத்தில்
தொலைகாட்சிகளும்
நாளிதழ்களும்
நமக்குச் சொல்லும் நிகழ்வுகள்
சிறியோர்களெல்லாம்
சமத்தாக இருக்கிறார்கள்
பிரபலங்கள் என்று சொல்லும்
பெரியோர்களெல்லாம்....
துப்பார்க்கு துப்பாய
தூ..தூ.வென்று ஒருவர்
இன்னொருவரோ
கீச்...கீச்..சென்று
தானும் அழுது
அடுத்தவரையும்
அழ வைக்கிறார்
இதுபோல் நிறைய
சமுதாய அவலங்கள்
செய்வதெல்லாம்
சமுதாயப் பிரபலங்கள்
இந்த ஆத்திரத்தை
அடக்க முடியாதவர்களுக்கு
ஆணிகளையும் சுத்தியையும்
கையில் கொடுத்தால்...
அவர்கள் மண்டையில்
அடித்துக் கொள்வார்களா...?
அடுத்தவர் தலையில்
அடித்துக் கொள்வார்களோ..?
அடித்துக் கொல்வார்களா..?
பிரபலங்களின்
ஆத்திரமோ? மூத்திரமோ?
***********************************************************************
என் முகநூல் சிரிப்பு வெடி........
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
Follow @PARITHITAMIL |