google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: பிரபலங்களும் அவலங்களும்

30/10/2012

பிரபலங்களும் அவலங்களும்



யார் இங்கே பிரபலங்கள்?
அவர்களின் செயல்கள்
அவசியங்களா? அபத்தங்களா?
இல்லையேல்
சமுதாய அபலங்களா?

இதற்கு ஒரு முடிவு வேண்டும்
இன்று ஒரு தீர்வு வேண்டுமென்று  
அந்தக் காட்டில் இருந்த குரங்குகள்
கூட்டம் கூடி ஆலோசனை செய்தன

அதில் ஒரு குரங்கு சொன்னது
"நாமெல்லோரும் குரங்குகள்தானே
ஏதோ ஆடி பிழைப்பு நடத்தும்
அந்தக் குரங்கு எப்படிப் பிரபலமானது?
அதற்குக் கா(நா)ட்டாமை செய்ய
என்ன தகுதி இருக்கு?" என்று
கூத்தாடிக் குரங்கை சீண்டியது.
நானும் ஆடுவேன் பாருங்கள்
என்று துள்ளிக் குதித்தது
அந்தக் கூத்தாடி குரங்கோ
கோபத்தில் கீழ்த்தரமாய் கத்தியது   
சபை என்றும் பாராமல்

இன்னொரு குரங்கோ-
"பாட்டுப் பாடும் இந்தக் குரங்கு
இங்கே எப்படிப் பிரபலமானது?" 
என்று பிராண்டியது
ஒரு பாடகிக் குரங்கை பார்த்து
நானும் பாடுவேன் கேளுங்கள்
என்று வாயைத் திறந்து கத்தியது
அந்தப் பாடகிக் குரங்கோ கோபத்தில்  
புகார் செய்யப் புறப்பட்டப் போனது

அங்குக் கூடியிருந்த குரங்குகள்
அடி பிடி தகராறு களோபகரம்
ஒவ்வொருவரும் தாங்களே பிரபலமென்று
அவரவர் திறமைகளைப் எடுத்து விட்டன

அதில் ஓன்று ஆண்டவனிடம் பேசுவதால்
அதுதான் பிரபலமென்று அடம்பிடித்தது   
பேசுவதில் பிரபலம் எழுதுவதில் பிரபலம்
உண்பதில் பிரபலம் உறங்குவதில் பிரபலம்

அப்போது அங்கே வந்த கிழட்டு குரங்கு
"ஏன் நீங்கள் மனிதர்கள் போல்
சண்டை சச்சரவு செய்து கொண்டு?  
நீங்கள் அத்தனை குரங்குகளும்
இங்கே பிரபலமான குரங்குகளே!"
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டம் கலைந்தது

திடுக்கிட்டு விழித்தேன்
திண்டாடிப்போனேன்
கண்டதெல்லாம் கனவு

எங்கும் இல்லை குரங்குகள்!
எங்கும் இருந்தார்கள் மனிதர்கள்!
  images thanks - google
இப்பதிவு பற்றி..?

12 கருத்துக்கள்:

  1. நல்ல நையாண்டிக் கவிதை! சிறப்பு!

    ReplyDelete
  2. உங்கள் படைப்பு பிரபலங்களும் அவலங்களும் இல் , எழுத்து நண்பர் na.jeyabalan ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: மலிவாய் போனதோ மனிதக் கூட்டங்கள்?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்களாக எதையாவது கற்பனை செய்யாதிர்கள்
      பஞ்ச தந்திர கதையை தேடிப்பாருங்கள் அதில் இது இருந்தாலும் இருக்கும்

      Delete
  3. கரையான்@karaiyaan30 October 2012 18:04

    ரைட்டு மாமோய்! யார் பிரபலம்னு தீர்ப்பு சொல்லிப்புட்ட. உன் மேல பிராது வந்திடப் போது! ;))

    ReplyDelete
  4. உங்கள் படைப்பு பிரபலங்களும் அவலங்களும் இல் , எழுத்து நண்பர் நிலாசூரியன் ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: என்ன சொல்றது அய்யா.... \'\'சபாஷ்

    ReplyDelete
  5. உங்கள் படைப்பு பிரபலங்களும் அவலங்களும் இல் , எழுத்து நண்பர் T.SIVABALAN ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: அருமை

    ReplyDelete
  6. தமிழ் நண்பர்கள்30 October 2012 20:58

    வணக்கம் PARITHI

    தங்களின் "பிரபலங்களும் அவலங்களும் " பதிவில் nandagopal.d புதிய கருத்தை பதிந்துள்ளார்
    கருத்து:

    (தயாரிப்பு சங்கம் ) எல்லரையும் குரங்கு ஆக்கி விட்டிர்கள்.
    உண்மைதான் அப்படிதான் இருக்கு.புகழுக்காக,சுயநலதிர்க்க்காகவும்
    இப்படிதான் செய்கிறார்கள் .

    அருமை கவிதை Clap Clap
    பதிவுக்கு கருத்து சொல்ல பிரபலங்களும் அவலங்களும்

    தமிழ் நண்பர்கள்
    http://tamilnanbargal.com

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நீங்களாக எதையாவது கற்பனை செய்யாதிர்கள்
      பஞ்ச தந்திர கதையை தேடிப்பாருங்கள் அதில் இது இருந்தாலும் இருக்கும்

      Delete
  7. பிரபலங்கள் குரங்குகள்
    குரங்குகள் பிரபலங்கள் :)
    ஏதோ நாமெல்லம் பிரபலம் இல்லப்பா

    ReplyDelete
  8. உங்கள் படைப்பு பிரபலங்களும் அவலங்களும் இல் , எழுத்து நண்பர் காளியப்பன் எசேக்கியல் ஒரு கருத்து பதிந்துள்ளார்.
    கருத்து: இல்லை பரிதி இல்லை! காணவில்லை இது நனவுதான் நான் இன்னும் இங்கிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்..எசேக்கியல்

    ReplyDelete
  9. தமிழ் நண்பர்கள்31 October 2012 09:57

    வணக்கம் PARITHI

    தங்களின் "பிரபலங்களும் அவலங்களும் " பதிவில் yarlpavanan புதிய கருத்தை பதிந்துள்ளார்
    கருத்து:
    குரங்கிலிருந்து வந்த மனிதனுக்கு
    குரங்குக் குணம் இருக்கக் கண்டீரோ
    பதிவுக்கு கருத்து சொல்ல பிரபலங்களும் அவலங்களும்

    தமிழ் நண்பர்கள்
    http://tamilnanbargal.com

    ReplyDelete
  10. குரங்குகளை வைத்தே பல உண்மைகளை சொல்லி விட்டீர்கள்.....மிக அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...
 
UA-32876358-1