google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: இளைய ராஜாவின் ஆத்திச்சூடி

Wednesday, October 17, 2012

இளைய ராஜாவின் ஆத்திச்சூடி


 
கவிஞர்களுக்கு வேண்டிய தகுதிகள் பற்றி 
இசைஞானி இளையராஜா 
எழுதியவைகள்....


உள்ளத்தில் அழகு
கவிதையில் கருத்து
கருத்தினில் தெளிவு
வளமான கற்பனை

தேர்பொருள் தேடல்
தேடியதுணர்தல்
உணர்ந்த துரைத்தல்
உரைப்பதில் உண்மை
நல்லவை காணல்

காண்பதில் கலத்தல் 
கலந்ததில் களித்தல் 
களித்ததை வடித்தல்
வடித்ததை வழங்கல்

வழக்கத்தில் ஒழுக்கம்
ஒழுக்கத்தில் உயர்வு
உயர்வினில் அடக்கம்
அடக்கத்தில் திண்மை

தின்மையில் ஆண்மை
ஆண்மையில் அன்பு
அன்பை யாசித்தல்
யாசகம் தவிர்த்தல்

தவறா உறுதி
உறுதியில் புலமை
புலமையில் வலிமை
வலிமையில் தலைமை

அழுக்கற வாழ்தல்
இழுக்கினை இகழ்தல்
போற்றன போற்றல்
புதுமை புகழ்தல்
பொருள்பெறப் புகழாமை
பொய்மையோடு ஓட்டாமை

இவைகள்
வெறும் வார்த்தைகள் அல்ல
கவிஞர்களுக்கு
இசைஞானி வகுத்த
ஆத்திச்சூடி........
Thanks-Kumutham




                 Thanks-YouTube-Published  by RAMESH BABU




Thanks-SoundCloud- Ariyaatha Vayasu by Ilayaraja.Indianmaestro

 
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1