google-site-verification: googlee9cb2a81adc6f062.html பரிதி.முத்துராசன்: உனக்கு உரிமை இல்லை

Saturday, June 09, 2012

உனக்கு உரிமை இல்லை



                       
உன்னையே அழித்துக்கொள்ள
உயிர்தந்த அன்னை தந்தை
உனக்கு தந்தனரோ அனுமதி?

காதலில் தோல்வியா?
இந்த மலர் இல்லையேல்
இன்னொரு மலர் உண்டு
இந்த வண்டு இல்லையேல்
இன்னொரு வண்டு உண்டு
காதலர்களே!
இந்த உயிர் இல்லையேல்
இன்னொரு உயிர் உண்டா?

வாழ்க்கையில் விரக்தியா?
வள்ளுவரின் குறளை
வாசித்துப்பாரு தினமும்
வந்து சேரும் எல்லா வளமும்

கொள்கை தீக்குளிப்பா?
கொடுமையான உயிரிழப்பு
தேவை நீ இந்த நாட்டுக்கு
தீர்வு தருமா உன் தீக்குளிப்பு?

தேர்வில் தோல்வியா?
உன் அறிவை சோதிக்க
உண்டோ தகுதி எவருக்கும்?
உன்னையே அறிவாய் நீ
உலகம் உன்னை அறியும்  

ஒரு நிமிடம் நிதானித்தால்  
உலகம் உன் உள்ளங்கையில்
உன்னையே அழித்துக்கொள்ள
உனக்கு உரிமை இல்லை
இப்பதிவு தங்களுக்குப் பிடித்திருந்தால்....
வலைதளங்களில் பகிருங்கள்....நன்றி!!!
பதிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள.......
ட்விட்டரில் இணைந்து கொள்ளுங்கள்
வாருங்கள் வாழ்வோம் முகநூல் நண்பர்களாக...
UA-32876358-1